Tuesday, November 6, 2018

ஈசன் உவக்கும் இன்மலர்கள் மூன்று

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல்  அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ?
வெள்ளை நிறப் பூவும் அல்ல வேறெந்த மலருமல்ல
உளளக் கமலம் அடி உத்தமனார் வேண்டுவது.

காப்பவிழ்ந்த மாமலரோ கழுநீர் மலர்த் தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலர் எதுவோ?
காப்பவிழ்ந்த மலரும் அல்ல கழுநீர்ததொடையும் அல்ல
கூப்பியகைக் காந்தள் அடி கோமகனார் வேண்டுவது.

பாட்டளிசேர் கொன்றையோ பாரில் இல்லாக் கற்பகமோ
வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலர் எதுவோ?
பாட்டளிசேர் கொன்றை அல்ல பாரில் இல்லாப் பூவும் அல்ல
நாட்டவிழி நெய்தல் அடி நாயகனார் வேண்டுவது.


யாழ் நூல் 
சுவாமி விபுலானந்தர்




No comments:

Post a Comment