பெயராகவும் வினையாகவும் வரும்.சொற்கள்


சொல் பெயர் வினை
அகல் தகழி நீங்கு
அடி பாதம் அடித்தல்
அணி ஆபரணம் அணிந்துகொள்
அணை வரம்பு தழுவு
அமர் போர் உட்கார்
அரி சிங்கம் அரிதல்
அரை பாதி/ இடை அரைத்தல்
அரும்பு மொட்டு தோன்றுதல்
அலை கடல் அலை அலைதல்
அறை வீட்டின் ஒரு பகுதி அறைதல்
ஆடு ஒருபிராணி ஆடுதல்
ஆள் ஒரு மனிதன் ஆளுதல்
ஆறு நதி இளைப்பாறுதல்
இசை சங்கீதம் இசைத்தல்/ இசைதல்
இடி முழக்கம் இடித்தல்
இரை உணவு இரைதல்
இறை கடவுள் இறைத்தல்
உடை ஆடை உடைத்தல்
உடு நட்சத்திரம் உடுத்தல்
ஊர் கிராமம் ஊர்தல்
ஊறு துன்பம் ஊறுதல் / கசிதல்
எட்டு ஒரு எண் எட்டுதல் /தாவிப்பிடி
ஏறு எருது ஏறுதல்
ஒளி வெளிச்சம் ஒளித்தல்/ மறைதல்
கரை ஓரம் கரைத்தல்
கலை வித்தை கலைத்தல்
கல் கற்பாறை படி
குடி மக்கள் குடித்தல்
குறி அடையாளம் குறித்தல்
கூடு பறவைக்கூடு கூடுதல்
கூறு பகுதி கூறுதல்
செல் கறையான் போ
சொல் சொற்கள் கூறு
சோதி பிரகாசம் ஆராய்தல்
தட்டு தட்டம் தட்டுதல்
திரி விளக்குத் திரி திரிதல்
தீட்டுஅழுக்கு தீட்டுதல்
துதி புகழ் தொழுதல்
தேர் இரதம் தெரிவு செய்
நடு மத்தி நடுதல்
நகை அணிகலன் நகைத்தல்
நாடு தேசம் நாடுதல்
நூல் புத்தகம் நூற்றல்
பணி வேலை வணங்குதல்
பற்று ஆசை பிடி
பார் பூமி பார்த்தல்
பிணை பெண்மான் பிணைத்தல்
பெயர் நாமம் பெயர்த்தல்
பொறி இயந்திரம் பொறித்தல்
மதி சந்திரன் மதித்தல்
மடி மடிப்பு/தாய் மடி இறத்தல்
மறை வேதம் மறைத்தல் /ஒளித்துவை
மறி பெண் ஆடு மறித்தல்
மலை மலைகள் மலைத்தல்
முடி கிரீடம் முடித்தல்
வலி நோ வலித்தல்
வழி பாதை வழிதல்
விதை வித்து விதைத்தல்
விழி கண் விழித்தல்
விளக்கு தீபம் விளக்குதல்

பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள்


3 comments:

  1. Amazing this is very useful for us. Thanks for your note

    ReplyDelete
  2. தறி பெயராகவும் வினையாகவும்

    ReplyDelete
  3. மிகவும் அவசியமான ஒன்று. தந்ததற்காக நன்றி

    ReplyDelete