நிறுத்தற் குறிகள்

Punctuation marks in Tamil


எழுத்து மூலம் கருத்தை தெளிவாக தெரிவிப்பதற்ற்குத் துணையாக நிறுத்தற்குறிகள் பயன்படுகின்றன. பொருள் நன்கு புலப்படுவதற்குக்  நிறுத்தற்குறியீடுகளைப் பயன் படுத்த வேண்டும்.
  • முற்றுப்புள்ளி(.)
    ஒரு வாக்கிய முடிவைக் காட்டுவது முற்றுப்புள்ளியாகும்.
    • வாக்கிய முடிவைக்காட்டுவது.
    • ஆதவன் ஓவியம் வரைந்தான்.
  • காற்புள்ளி(,)
    சொற்களை தனித்தனியாகவே அடுக்கடுக்காகவோ பிரிக்கும் போது காற்புள்ளி இடவேண்டும்.
    • சொற்களை தனித்தனியாகவோ, அடுக்கடுக்காகவோ பிரிக்கும் போது கட்புள்ளி இடவேண்டும். உ+ம்:
      ஆறானது மலைநாடு, காடு, சமவெளி, அணைகள் என்பவற்றை கடந்து வருகிறது.
      மா ,பலா, வாழை என்பன முக்கனிகள் ஆகும்.
    • வாக்கியத்தில் பொருள் மயக்கம் ஏற்படும் இடத்து தெளிவுபடுத்திக் காட்டுவதற்கு காற்புள்ளி பயன்படுகின்றது. உ+ம்:
      சந்திரா, குமாரியிடம் சங்கீதம் கற்றாள்.
    • முகவரி இடுபொழுதும் போதும் காற்புள்ளி பயன்படுத்தப்படுகின்றது.
      திரு. அ.கணேசன், 18, பூங்கா வீதி, கொழும்பு.
  • முக்காற்புள்ளி (:)
    ஒரு விடையத்தை விளக்குவதற்கு முன் இடப்படுவதே இக்குறியீடாகும்.
    இறுவட்டு : தரவுகளைச் சேமித்து வைப்பதற்கு பாவிக்கப்படும் உபகரணம்.
  • வினாக்குறி(?)
    ஒரு வாக்கியம் வினா வாக்கியமாக அமையும் போது அதற்கு இறுதியில் வினாக்குறி இடல் வேண்டும்.
    • வினா வாக்கியங்களுக்கு இறுதியில் இடப்படுகின்றது.
    • இங்கே வந்தவர் யார்?
    • இலங்கையின் தேசிய மலர் எது?
  • வியப்புக்குறி(!)
    இது உணர்ச்சிகளை உணர்த்தும் சொல்லை அடுத்து இடப்பெறும் குறியாகும்.
    • இதனை உணர்ச்சிக் குறி என்பர்.
    • தலைவா, வருக! வருக!
    • ஐயோ! பாவம்! இவன் நல்லவனாயிற்றே!
    • சீச்சீ! என்ன வேலை செய்தாய்?
  • அடைப்புக்குறி ( )
    அடைப்புக்குறிகள் எழுத்துப்பகுதியின் இடையே மேற்கோள்கள் அல்லது விளக்கத்தினை உண்டாக்குவதற்காக ப யன்படுத்தப்படுகின்றன. ஆங்கிலச் சொற்களைத் தமிழ் ஆக்கங்களுக்கிடையில் பயன் படுத்தும் போதும் அடைப்புக்குறிகள் பயன்படுத்தவேண்டும்.

    முக்கனிகள் (வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்) எங்கள் ஊரிலே நிறைய உள்ளன.
  • மேற்கோடக்குறி ("  ")
    ஒருவர் கூறிய சொற்களை அல்லது கூற்றுக்களை அவர் கூறியவாறே எடுத்தாளும் போது மேற்கோடக்குறி இடப்படும்.

    "அறம் செய விரும்பு" என்றார் ஔவையார்.
    புயற் காற்று "ஊ...ஊ..." என இரைந்தது.



4 comments:

  1. மிக்க நன்றி

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ளதாக இருந்தது கீழ்க்கால் சுழி எவ்வாறு இருக்கும் என்பதை கூறவும்

    ReplyDelete