Friday, April 7, 2023

உறவுகள் மேம்பட சில தகவல்கள்

  • நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
  • அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்.
  • எந்த விஷயத்தையும் பிரச்சினையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக் கொடுங்கள்.
  • சில நேரங்களில் சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
  • நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.
  • குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
  • உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
  • மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள்.
  • அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
  • எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்.
  • கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
  • அற்ப விஷயங்களையும் பெரிது படுத்தாதீர்கள் .
  • உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
  • மற்றவர் கருத்துகளை, செயல்களை, நடக்கின்ற நிகழ்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
  • மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
  • புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமிலாது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
  • பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்க்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
  • அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
  • பிரச்சினைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் தொடக்க முன் வாருங்கள்.

வேதாத்திரி மகரிசி

No comments:

Post a Comment