Wednesday, October 3, 2018

Vellaith thamarai வெள்ளைத் தாமரை வீணையவள்

வெள்ளைத் தாமரை வீணையவள்

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்ப்பாள்;
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறுங்
கருணை வாசகத்துட் பொருளாவாள்

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்;
மக்கள் பேசும் மழலை யிலுள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரங் கோபுரங் கோயில்
ஈத னைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.


மகாகவி ஸ்ரீ சுப்ரமணிய பாரதியார்




No comments:

Post a Comment