Thursday, November 8, 2018

புணர்ச்சி வகைகள்

தமிழில் பல சொற்களைப் பொருள் தரக்கூடிய வகையில் பிரித்து எழுதமுடியாது.

உ+ம் :
காற்று
பந்து
இனிப்பு
மலர்
நாய்
ஓசை
ஒளி
இன்பம்
மரம்

ஆனால் பல சொற்கள் பொருள் தரக்கூடிய இரண்டு சொற்கள் இணைந்து வந்துள்ளன.
உ+ம்:
மணல்வீடு = மணல்+வீடு
விண்மீன் = விண் +மீன்
மாவிலை = மா+இலை

புணர்ச்சி வகைகள்
சொற்கள் ஒன்றோடு ஒன்று பொருள் தரும் வகையில் புணரும் பொழுது பலசொற்கள் இயல்பாகவும், பல சொற்கள் விகாரப்பட்டும் புணரும்.

  • இயல்புப் புணர்ச்சி
    சொற்கள் பொருள் தரும் வகையில் இயல்பாகச் சேர்ந்தால் அது இயல்புப் புணர்ச்சி எனப்படும்.
    கண்+காட்சி = கண்காட்சி
    மண்+வெட்டி =மண்வெட்டி
    கொடி+மரம்=கொடிமரம்
  • விகாரப் புணர்ச்சி
    சொற்கள் பொருள் தரும் வகையில் ஒன்றோடு ஒன்று சேரும்போது விகாரமடைந்து சேர்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
    விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்.
    • தோன்றல் விகாரம்
      புணர்ச்சியின் போது புதிய எழுத்தொன்று சேர்ந்தால் அது தோன்றல் விகாரம் எனப்படும்.
      காலை+பொழுது=காலைப்பொழுது
      மா+பழம்=மாம்பழம்
    • திரிதல் விகாரம்
      புணர்ச்சியின் போது ஓர் எழுத்து வேறோர் எழுத்தாக மாறுதல் திரிதல் விகாரம் எனப்படும்.
      மண்+பானை=மட்பானை
      கல்+குகை=கற்குகை
      பொன் +குடம்=பொற்குடம்
    • கெடுதல் விகாரம்
      புணர்ச்சியின் போது எழுத்துக்கள் கெடுமாயின் அது கெடுதல் விகாரம் எனப்படும்.
      மரம்+வேர்=மரவேர்
      பணம்+வரவு=பணவரவு

சேர்த்தெழுதல் பயிற்சிகள்



18 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Replies
    1. இரண்டு

      -இயல்பு புணர்ச்சி
      -விகாரப்‌ புணர்ச்சி

      Delete
    2. குற்றியலுகரப் புணர்ச்சி
      உயிரீற்றுப் புணர்ச்சி யும் அதன் வகைகள் தானே?

      Delete
  3. Punarchi naangu vagai padum
    Aanal ingu 2 vagai thaan irukirathu

    ReplyDelete
  4. Punarchi naangu vagai padum
    Aanal ingu 2 vagai thaan irukirathu

    ReplyDelete
  5. வீடு+ கூரை எவ்வகை

    ReplyDelete